வெசாக் பண்டிகை முன்னிட்டு திவுலபிட்டிய மரதகஹமுல பிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, சிலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த வெசாக் தோரணம் இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.