தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான ஐ.தே.கவின் யோசனைக்கு கபே அமைப்பு கடும் எதிர்ப்பு!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு கபே அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும் என ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கபே அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில், குறிப்பாக ஒரு ஜனநாயக அரசில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்துவது அவசியம்.

ஐ.தே.க பொதுச் செயலாளரின் கூற்றுப்படி, பொதுத்தேர்தல், மற்றும் ஜனாதிபதி பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற செயலாளரின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், அரசாங்கம் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தலை தன்னிச்சையாக ஒத்திவைத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்து, பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்து, அதற்காக கிட்டத்தட்ட 94 கோடி ரூபாவைச் செலவு செய்து, அதே தேர்தலை நடத்தாமல் ஜனநாயக விரோதமாகச் செயற்படுகிறது.

அதற்கிணங்க, அரசாங்கத்தின் அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த காலப்பகுதிக்குள் உரிய தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கஃபே அமைப்பு அன்பு  கேட்டுக்கொள்கின்றது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...