தேர்தல் பிரச்சாரத்திற்காக மொட்டுக் கட்சியின் அதிநவீன தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

Date:

எதிர்வரும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்ல நெலும் மாவத்தை ஜெயந்திபுரவில் அதிநவீன தேர்தல் அலுவலகத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை (10) திறந்து வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர.

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை காலை (10) அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொகுதிகள் மட்டத்திலும் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகங்கள் திறக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரந்த பிரச்சாரப் பொறிமுறை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...