பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் நோர்வே, ஸ்பெயின், அயர்லாந்து

Date:

பலஸ்தீனத்தை ஒரு நாடாக நோர்வே அங்கீகரிக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் (Jonas Gahr) தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியை இரு நாடுகளாக பிரிப்பது தான் இஸ்ரேலுக்கு நல்லது என்று தெரிவித்த அவர், பலஸ்தீனத்திற்கு நோர்வே அங்கீகாரம் அளிக்கும் என்று அறிவித்தார்.

பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் இல்லையென்றால் மத்திய கிழக்கில் அமைதி நிலவாது  என்றும்  இந்தப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு காயமடைந்த நிலையில், இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் ஒரே மாதிரியான அரசியல் தீர்வை வழங்கி , ஒரே மாற்றாக  வாழ வேண்டும் என்றும்   பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பலஸ்தீனிய அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான திகதியை இன்று அறிவிக்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அயர்லாந்தும் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்த தனது திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அயர்லாந்து மற்றும் நோர்வேயில் உள்ள இஸ்ரேலின் தூதர்களை உடனடியாக இஸ்ரேலுக்கு திரும்புமாறு இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது ‘அயர்லாந்தும் நோர்வேயும் இன்று பயங்கரவாத்தை ஏற்றுக்கொண்டு முழு உலகிற்கும் ஒரு செய்தியை சொல்லி இருக்கின்றன” என்று காட்ஸ் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தீவிரவாதத்தையும் உறுதியற்ற தன்மையையும் தூண்டும் என்றும் அவர்களை ஹமாஸின் கை பாவைகள் ஆக்கும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இதுவரை 193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 143 பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...