பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்ட உத்தரவு: புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத்!

Date:

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் , வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அறிவித்துள்ளார்.

மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் புத்தளம் மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறு பாரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலகம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த புத்தளம் மாவட்ட செயலாளர், அதுதொடர்பில் குறித்த மரங்களை அகற்ற தேவையான மதிப்பீட்டு அறிக்கையை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மேலும் கேட்டுள்ளார்.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...