காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவரும் பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் புகாரி தக்கியாவின் ஷேகு நாயகம் சங்கைக்குரிய அஷ்ஷெய்க் அஹம்மத் ஆலிம் பின் அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் (காதிரியத்துன் நபவிய்யா ) அவர்களின் தாயார் கடந்த 19ஆம் திகதி காலமானதையிட்டு இஸ்லாமிய ஐக்கிய பேரவை தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.
காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவராக இருந்து இறையடி சேர்ந்த மர்ஹூம் அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் பின் அஷ்ஷெய்க் அப்துஸ் ஸமிஹ் ஆலிம் காதிரிய்யத்துன் நபவிய்யா (ரஹ்) அவர்களின் பாரியாராக இருந்து இவரது ஆன்மீகப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு மிகவும் உறுதுனையாக இருந்த ஓர் உத்தமியாவார்.
சங்கைக்குரிய பேருவளை புகாரி தரீக்காவின் ஷேகு நாயகம் அவர்களை இந்த உலகுக்கு ஈன்றெடுத்த இந்த தாயாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் எனவும் அல்லாஹுத்தஆலா அன்னாரை பொருந்திக்கொள்ள வேண்டும் எனவும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌஸை அடைய வேண்டும் எனவும் இஸ்லாமிய ஐக்கிய பேரவை பிரார்த்திக்கிறது.