புகாரி தக்கியா ஷேகு நாயகத்தின் தாயார் மறைவுக்கு இஸ்லாமிய ஐக்கிய பேரவை அனுதாபம்!

Date:

காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவரும் பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் புகாரி தக்கியாவின் ஷேகு நாயகம் சங்கைக்குரிய அஷ்ஷெய்க் அஹம்மத் ஆலிம் பின் அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் (காதிரியத்துன் நபவிய்யா ) அவர்களின் தாயார் கடந்த 19ஆம் திகதி காலமானதையிட்டு இஸ்லாமிய ஐக்கிய பேரவை தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவராக இருந்து இறையடி சேர்ந்த மர்ஹூம் அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் பின் அஷ்ஷெய்க் அப்துஸ் ஸமிஹ் ஆலிம் காதிரிய்யத்துன் நபவிய்யா (ரஹ்) அவர்களின் பாரியாராக இருந்து இவரது ஆன்மீகப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு மிகவும் உறுதுனையாக இருந்த ஓர் உத்தமியாவார்.

சங்கைக்குரிய பேருவளை புகாரி தரீக்காவின் ஷேகு நாயகம் அவர்களை இந்த உலகுக்கு ஈன்றெடுத்த இந்த தாயாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் எனவும் அல்லாஹுத்தஆலா அன்னாரை பொருந்திக்கொள்ள வேண்டும் எனவும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌஸை அடைய வேண்டும் எனவும் இஸ்லாமிய ஐக்கிய பேரவை பிரார்த்திக்கிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...