புத்தளத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவு: சமூக நல பணியாளர்கள் களத்தில்

Date:

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் நேற்று (18) இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, முள்ளிபுரம் பாலாவி உள்ளிட்ட பல பிரதேசஙகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

அதேபோல புத்தளம் தள வைத்தியசாலை தொடர்ந்து பெய்து வரும்‌ கன மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்குவதில் புத்தளம் வாழ் சமூக நல பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

புத்தளம் ஐ.பீ.எம்.மண்டபத்தில் புத்தளம் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் தொண்டர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர் ஒன்று கூடி உணவு சமைப்பதில் இறங்கினர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...