மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பு பள்ளிவாசல்களில் ஜனாசா தொழுகை

Date:

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி அவர்களுக்காக மறைவான ஜனாசா தொழுகை இன்று கொழும்பிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறவில்லை.

அந்தவகையில் கொழும்பு 10 மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் சலாம்  ஜும்ஆ பள்ளிவாசலிலும், வேகந்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும் மறைவான ஜனாசா தொழுகை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெறும்.

மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் அவர்களும்,வேகந்தை பள்ளிவாசலுக்கு   ஈரானிய கலாசார உத்தியோகத்தரும் கலந்துகொள்வர்.

இதேவேளை கொழும்பு 7, ஜாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜனாசா தொழுகை நடைபெற ஏற்பாடாகியிருந்தபோதும் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...