மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு அனுதாப கையொப்பங்களை பெறும் செயல்திட்டம் புத்தளத்தில்

Date:

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களை புத்தளத்தில் வாழ்கின்ற மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கமைய புத்தளம் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற அனுதாப கையொப்பங்களை பெறுகின்ற செயல்திட்டம் தற்பொழுது புத்தளம் நுகுமான் மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இதில் கையொப்பங்களை இட முடியும்.

இன்று மாலை வரை பெறப்படுகின்ற இந்த கையொப்பங்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதுவராலயத்தின் ஊடாக ஈரான் நாட்டின் பதில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு பாரப்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் அது போன்று நலிவுற்ற மக்களுக்கான நல நலன் திட்டங்களுக்கும் தொடர்ந்து உதவி வரும் ஒரு நாடு என்பதினால் இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புத்தளம் கலாச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...