மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மதத் தலைவர்களின் மாநாடு: (photos)

Date:

மலேசியா (Malaysia) கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச மதத் தலைவர்கள் மாநாடு கடந்த மே 8 ஆம் திகதி நிறைவடைந்தது.

குறித்த  மாநாட்டில் 57 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2-ஆயிரம் மதப் பிரமுகர்கள் மற்றும் அறிவுஜீவிகள் பங்கேற்றனர்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் இலங்கையில் இருந்து சென்ற அணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல் தலைமையிலான சர்வமதக் குழு தலைமை தாங்கியது.

இந்த மாநாடானது உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் வேற்றுமைக்குள் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு நடைபெற்றது.

மாநாட்டில்  சிறப்புரையாற்றிய மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம்,

நீதியான சமூகத்தை கட்டியெழுப்புவதில் சமய நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.

அரசியல் முரண்பாடுகள் மீதான பொது விரக்தியின் மத்தியில் நீதியை மேம்படுத்துவதில் இன்னும் உறுதியான பங்கை எடுக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

மதத் தலைவர்கள் தார்மீகக் கொள்கைகளை நிலைநிறுத்தவும், முன்மாதிரியாக வழிநடத்தவும், அவர்களைப் பின்பற்றுபவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்து சமூகங்களுக்கு தேவையான முன்னேற்றங்களுக்கு குரல் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசிய மத விவகார அமைச்சர் நைம் மொக்தார், மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  ஒற்றுமையின் மதிப்புகளை ஒன்றிணைக்கும் நோக்கில் பகிரப்பட்ட நாகரீகத்தை உருவாக்குவது பற்றி பேசினார்.

மேலும் சமயங்களுக்கிடையிலான உரையாடலின் அவசியத்தையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்  எடுத்துரைத்தார்.

“இந்த சர்வதேச மாநாட்டில் சர்வதேச, மத, அரசியல், அறிவுஜீவி, கல்வி மற்றும் ஊடகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...