மின் துண்டிப்பால் இரண்டு இலட்சம் பேர் இருளில்

Date:

நாட்டில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின் மின்சார கணக்குகள் மின்சார சபை மூலம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மின்சாரத்தை துண்டித்து 90 நாட்களுக்குள் மீண்டும் மின்சார தொடர்பை பெற்றுக்கொள்ளத் தவறும் பாவனையாளர்களின் மின்சார தொடர்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்சார கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தால் மின் பாவனையாளர்களுக்கு 2022ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 3 கோடிக்கு அண்மித்த சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், மின்சார கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தினால் 13 இலட்சத்து 8 ஆயிரத்து 871 பேரின் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...