முஸ்லிம் திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளராக கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களப் பணிப்பாளர்!

Date:

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பைஸல் ஆப்தீன் உயர்பதவி பெற்றுச் சென்றதன் பி்ன்னரான வெற்றிடம் கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பின்டோ அவர்களினால் நிரப்பப்பட்டுள்ளது.

இம்மாதம் 14 ஆம் திகதி முன்னாள் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் விலகிச் சென்றதிலிருந்து இவர் பணிப்பாளராக பதில் கடமையாற்றி வருகின்றார்.

தற்போது மும்முரமாகச் செயற்படும் ஹஜ் விவகாரங்கள், வக்பு சபை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் தற்காலிகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மத விவகாரப் பணிப்பாளரினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் தனியாக இயங்கி வந்த ஒன்பது மாடிக் கட்டடத்திலேயே தற்போது கிறிஸ்தவ மற்றும் இந்து மத விவகாரத் திணைக்களங்களும் இயங்கி வருகின்றன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...