‘முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் விவகாரத்தை அரசியலாக்குவது நல்லதல்ல’

Date:

குறிப்பு: நேற்று எமது செய்தி தளத்தில் முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமனம் பற்றிய செய்தியை பிரசுரித்தோம். இவ்விடயம் முஸ்லிம் சமூகம் மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக முஸ்லிம் அரசியல் மட்டத்தில் பல விமர்சனங்களை அவதானிக்க முடியுமாக இருக்கிறது. இது தொடர்பாக முகப் புத்தகத்தில் பதிவிடப்பட்ட ஒரு கருத்தை வாசகர்களுக்கு முன்வைக்கிறோம்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் வரும் வரை திணைக்களத்தின் 9 மாடி கட்டிடத்தில் 3ஆவது மாடியில் கிறிஸ்தவ திணைக்களம் உள்ளது.

கிறிஸ்துவ திணைக்களத்தின் பணிப்பாளராக  சத்துரி பின்டோ அவர்களே பதில் பணிப்பாளராக நியமிகக்கப்பட்டுள்ளார். மிகத் திறமையானவர்,  துணிச்சல்மிக்கவர் மிகத் தியாகத்துடன் பணியாற்றுகின்றார்.

தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம் , தற்காலிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் மிகத் திறமையானவர் அவர் இருக்கும் இந்த குறுகிய காலத்தில் திணைக்களத்தின் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம் இதனை அரசியலாக இனவாதமாக எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பார்க்க கூடாது.

இதனை வைத்து அரசியல் செய்யவும் கூடாது மிக துணிச்சலான மிக நேர்மையான ஒருவர் பதில் பணிப்பாளர் மட்டுமே உண்மையில் எமது முஸ்லிம் அரசியல் மற்றும் ஏனைய ஒருசிலர் இதனை அணுகும் முறை கவலைக்குறியதாகும் எனவும் குறிப்பிட்ட முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...