ரணிலுக்கு மேலும் 5 வருட ஆட்சிக்காக மக்கள் கருத்து கணிப்பு? l UNPக்குள் கலந்துரையாடல்!

Date:

மக்கள் கருத்து கணிப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற நிலையை தவிர்த்து, மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான மக்கள் கருத்து கணிப்பை நடாத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பல சட்டமூலங்களை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளமையானது, மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமானதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதுடன், புதிய ஜனாதிபதி அந்த திகதியில் பதவி பிரமாணம் செய்ய வேண்டியது கட்டாயமானதாகும்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...