விடைபெற்றுச் செல்லும் முன்னாள் பணிப்பாளருக்கு சர்வமதத் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம்

Date:

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த ஒரு வருடத்துக்கு மேல் கடமையாற்றி பதவியுயர்வு பெற்றுச் செல்லுகின்ற பணிப்பாளர் பைஸல் ஆப்தீனுக்கான பிரியாவிடை நிகழ்வொன்று சர்வ மதங்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செவ்வாயன்று (14) முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய மதத் தலைவர் கலாநிதி அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அல்காதிரி, கிறிஸ்தவ மதத் தலைவர் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் இணைந்து சர்வமதத் தலைவர்கள் சார்பில் விடைபெற்றுச் செல்லும் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் புதிய பதவி சிறப்பாக அமைவதற்காக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பௌத்த மதத்தலைவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக சேவையாற்றிய காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு பணிப்பாளர் செய்த சேவைகளை அவர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்ததோடு ஏனைய மதங்களின் செயற்பாடுகளுக்கும் அவர் வழங்கிய பங்களிப்புக்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...