ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பது தொடர்பான தீர்மானத்திற்கமைய அந்த கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.
இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான உண்மைகளை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதியரசர் சந்துன் விதான தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது