1.3 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிப்பு: எரிசக்தி அமைச்சர்

Date:

2022 – 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மின்சாரக் கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்பட்டதன் காரணமாக கிட்டத்தட்ட 30 மில்லியன் சிவப்பு பில்கள் வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் 1.3 மில்லியன் பாவனையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

126,000 இற்கும் அதிகமான கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கிட்டத்தட்ட 1.9 மில்லியன் புதிய மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 7.2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார பாவனையாளர்கள் இருப்பதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...