YMMA இன் மனித நேயப் பணி வெல்லம்பிட்டியில்..!

Date:

கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், வை.எம்.எம்.ஏ. பேரவையின் உதவிச்செயலாளர் அப்துல் அலீம் எம். நுவைஸ் அவர்களின் நிதியுதவியில் 50 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி வெல்லம்பிட்டி Dewdrop Banquet Hall இல் இடம்பெற்றது.

அகில இலங்கை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீடின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் துஷார முத்துகொட வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க நிலந்த, பிரஜா பொலிஸ் OIC ரொஷான் அசங்க மற்றும் வை. எம். எம். ஏ. பேரவையின் மாவட்ட பணிப்பாளர் நஸாரி காமில் , மத்திய கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளை தலைவர் அஹமட் சலாஹுதீன்,  கல்வித் தலைவர் அன்வர் சதாத் மற்றும் Exco உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீதர்மோதயா விஹாராதிபதி பூஜ்ய கவிதாஜா தேரர், மஸ்ஜித் அஸ் ஸஃபா இமாம் மௌலவி  ஏ. முனாப் (முஅய்யிதி) உள்ளிட்ட சமயத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...