YMMA இன் மனித நேயப் பணி வெல்லம்பிட்டியில்..!

Date:

கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், வை.எம்.எம்.ஏ. பேரவையின் உதவிச்செயலாளர் அப்துல் அலீம் எம். நுவைஸ் அவர்களின் நிதியுதவியில் 50 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி வெல்லம்பிட்டி Dewdrop Banquet Hall இல் இடம்பெற்றது.

அகில இலங்கை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீடின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் துஷார முத்துகொட வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க நிலந்த, பிரஜா பொலிஸ் OIC ரொஷான் அசங்க மற்றும் வை. எம். எம். ஏ. பேரவையின் மாவட்ட பணிப்பாளர் நஸாரி காமில் , மத்திய கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளை தலைவர் அஹமட் சலாஹுதீன்,  கல்வித் தலைவர் அன்வர் சதாத் மற்றும் Exco உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீதர்மோதயா விஹாராதிபதி பூஜ்ய கவிதாஜா தேரர், மஸ்ஜித் அஸ் ஸஃபா இமாம் மௌலவி  ஏ. முனாப் (முஅய்யிதி) உள்ளிட்ட சமயத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...