இந்தியாவில் கைதானவர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பிணை!

Date:

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் திகதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் விமானிநிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனக்கூறி சந்தேகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த நால்வர் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் புன்சர அமரசிங்க  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு போலியான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...