ஈரானிய மக்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கிறோம்: Amazon college நிறுவனர் இரங்கல்

Date:

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில் மரணமானதையடுத்து இலங்கையில் அமைந்துள்ள ஈரான் துாதுவரலாயத்திற்கு அரசியல்,மத,சமூக பிரதிநிதிகள் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் தமது கவலையினை ஈரான் அரசுக்கும்,நாட்டு மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமேசன் கல்வி நிலையத்தின் ( Amazon College and Amazon Compus) நிறைவேற்று பணிப்பாளரும், சமூக சேவையாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார், அனுதாப பதிவேட்டில் மர்ஹூம் இப்றாஹிம் ரைசியின் துணிச்சலான தீர்மானங்கள் தொடர்பில் பதிவிட்டார்.

மேலும் ஈரானின் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி மொஹமட் முக்பர் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,ஈரான் நாட்டு மக்களும் அரசாங்கமும் தற்போது எதிர்கொண்டுள்ள கவலையான தருணத்தில் இலங்கையர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது இலங்கைக்கான ஈரான் நாட்டின் துாதுவர் டாக்டர்.அலி ரீசா டெல்கோஷ் ( Dr.Alireza Delkhosh) அவர்களை சந்தித்து, இது தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...