ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலத்திற்கு வாக்களிக்கும் எம்.பிக்களுக்கு, பெங்கமுவே நாலக தேரர் விடுக்கும் எச்சரிக்கை

Date:

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கும் சட்டமூலத்திற்கு வாக்களித்தால் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் போது கவனமாக இருக்குமாறு வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் உட்பட பல சிங்கள பௌத்த அமைப்புகள் இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் எனவும் ஓரினச்சேர்க்கை என்பது நமது கலாச்சாரம் மற்றும் நமது சமூகத்தை கடுமையாக பாதிக்கும் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்த மதமும் ஓரினச்சேர்க்கையை நல்லதாக அங்கீகரிக்கவில்லை. கலப்பு கலாச்சாரம் கொண்ட மேற்கத்தைய நாடுகளில் இது அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். அது எங்களுக்கு கவலை இல்லை.

ஆனால், நமது கலாச்சாரம் அப்படியல்ல.பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட எமது கலாச்சாரம் சமூகத்திற்கும் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.

இது அரசாங்கத்தில் அதிகாரம் படைத்தவர்களின் தேவைக்காக செய்யப்படுகிறதா அல்லது மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கினால் செய்யப்படுகிறதா என்று கற்பனை செய்வது கடினம்.

மேலும் யாராக இருந்தாலும் அது அவர்களின் செல்வாக்கின் அடிப்படையிலோ அல்லது அவர்களின் சொந்த தேவைகளின் அடிப்படையிலோ இருந்தாலும்  இது நமது கலாச்சாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டால் குடும்பக் கட்டமைப்பு உடைந்து விடும் எனவும் பெங்கமுவே நாலக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...