கம்பஹாவில் காணாமல் போன பாடசாலை மாணவிகள் கண்டுபிடிப்பு

Date:

கம்பஹா, யக்கல பகுதியில் மேலதிக வகுப்புகளுக்காக சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவர் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யக்கல பொலிஸாருக்கு ஒரு முறைப்பாடும் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல பொலிஸாருக்கும் கிடைத்திருந்தன.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாணவிகள் பொலன்னறுவையில் இருந்து காலி செல்லும் போது பெண்ணொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதேவேளை மூன்று மாணவிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் பிள்ளைகளுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அந்த வகையில், பல மாணவிகள் தங்களின் பரீட்சை முடிந்த கையோடு பெற்றோருக்கு எந்த தகவலும் வழங்காமல் வீட்டை விட்டு ஓடும் சம்பவங்கள் பல அண்மையில் இருந்து பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...