கலா ஓயாவிலிருந்து நீரை சுத்திகரித்து கற்பிட்டிக்கு கொண்டு வர விசேட வேலைத்திட்டம்!

Date:

கலா ஓயாவின் நீரை சுத்திகரித்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கற்பிட்டிக்கு நீரை கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கற்பிட்டி என்பது இலங்கையில் பல மரக்கறிகளை பயிரிடக்கூடிய ஒரு பிரதேசமாகும், அத்துடன் ஏற்கனவே நிலக்கரி, காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் நாட்டின் தேசிய மின்சார அமைப்பிற்கு 66 வீதமான மின்சாரத்தை வழங்கும் பிரதேசமாகும்.

மேலும், இலங்கையின் உப்பு உற்பத்தியில் 50 வீதத்துக்கும் அதிகமான உற்பத்தியானது புத்தளம் மாவட்டத்தின் பிரதான கற்பிட்டியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை சுத்தமான குடிநீரின்மையேயென நீர் வழங்கல் அமைச்சு கூறுகிறது.

இதன் விளைவாக, கற்பிட்டி மஜ்ஜித் குஃபா பள்ளிவாசல் தளத்தில் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான செலவில் நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கலா ஓயாவிலிருந்து நீரை சுத்திகரித்து கல்பிட்டிக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தை உடனடியாக செய்யமுடியாதெனவும், அதற்கு அதிக முயற்சியும் செலவும் தேவைப்படுமெனவும் அமைச்சு கூறுகிறது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இதை முழுமையாக முடிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...