சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

Date:

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை துருக்கி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நியூயார்க்கின் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளரான குறித்த சந்தேக நபர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடத்த இருந்த 1,500 விஷத் தேள்கள் மற்றும் சிலந்திகள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மருந்து திரவங்களைக் கொண்ட டசன் கணக்கான பிளாஸ்டிக் போத்தல்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த திரவமானது தேள் விஷத்தில் இருந்து பெறப்பட்ட மிகவும் மதிப்புமிக்க மருந்து என்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதுடன் இது லிட்டருக்கு 10 மில்லியன் டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் சட்டங்களுக்கு அமைய இத்தகைய உள்ளூர் இனங்களை ஏற்றுமதி செய்வது தடை  செய்யப்பட்டுள்ளன.

தேசிய வனவிலங்கு கடத்தல் விதிமுறைகளை மீறியதாகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில்  இவர் துருக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...