பலத்த பாதுகாப்புடன் ‘மிதிகம’ ருவன் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

Date:

பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் “மிதிகம ருவன்” துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் துபாயில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (31) காலை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மிதிகம ருவன் பாதாள குழு உறுப்பினரான ஹரக் கட்டாவின் மைத்துனராவார்.

துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...