மின் துண்டிப்பால் இரண்டு இலட்சம் பேர் இருளில்

Date:

நாட்டில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின் மின்சார கணக்குகள் மின்சார சபை மூலம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மின்சாரத்தை துண்டித்து 90 நாட்களுக்குள் மீண்டும் மின்சார தொடர்பை பெற்றுக்கொள்ளத் தவறும் பாவனையாளர்களின் மின்சார தொடர்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்சார கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தால் மின் பாவனையாளர்களுக்கு 2022ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 3 கோடிக்கு அண்மித்த சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், மின்சார கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தினால் 13 இலட்சத்து 8 ஆயிரத்து 871 பேரின் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...