முஸ்லிம் திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளராக கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களப் பணிப்பாளர்!

Date:

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பைஸல் ஆப்தீன் உயர்பதவி பெற்றுச் சென்றதன் பி்ன்னரான வெற்றிடம் கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பின்டோ அவர்களினால் நிரப்பப்பட்டுள்ளது.

இம்மாதம் 14 ஆம் திகதி முன்னாள் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் விலகிச் சென்றதிலிருந்து இவர் பணிப்பாளராக பதில் கடமையாற்றி வருகின்றார்.

தற்போது மும்முரமாகச் செயற்படும் ஹஜ் விவகாரங்கள், வக்பு சபை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் தற்காலிகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மத விவகாரப் பணிப்பாளரினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் தனியாக இயங்கி வந்த ஒன்பது மாடிக் கட்டடத்திலேயே தற்போது கிறிஸ்தவ மற்றும் இந்து மத விவகாரத் திணைக்களங்களும் இயங்கி வருகின்றன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...