விடைபெற்றுச் செல்லும் முன்னாள் பணிப்பாளருக்கு சர்வமதத் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம்

Date:

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த ஒரு வருடத்துக்கு மேல் கடமையாற்றி பதவியுயர்வு பெற்றுச் செல்லுகின்ற பணிப்பாளர் பைஸல் ஆப்தீனுக்கான பிரியாவிடை நிகழ்வொன்று சர்வ மதங்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செவ்வாயன்று (14) முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய மதத் தலைவர் கலாநிதி அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அல்காதிரி, கிறிஸ்தவ மதத் தலைவர் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் இணைந்து சர்வமதத் தலைவர்கள் சார்பில் விடைபெற்றுச் செல்லும் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் புதிய பதவி சிறப்பாக அமைவதற்காக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பௌத்த மதத்தலைவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக சேவையாற்றிய காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு பணிப்பாளர் செய்த சேவைகளை அவர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்ததோடு ஏனைய மதங்களின் செயற்பாடுகளுக்கும் அவர் வழங்கிய பங்களிப்புக்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...