விண்ணப்பிக்காத பாட விடயதானத்தை பெற்ற ஆயிரக்கணக்கான G.C.E (O/L) பரீட்சார்த்திகள் l நடந்தது என்ன?

Date:

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, தாம் விண்ணப்பிக்காத பாட விதானத்துடனான அனுமதி பத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்துகின்றது.

இதனால், மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.

எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த பரீட்சைக்காக 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 65,331 பரீட்சார்த்திகள் இரண்டாவது தடவையாக பரீட்சையை எதிர்கொள்ளும் தனியார் பரீட்சார்த்திகளாவார்.

இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகிறார்.

குறித்த பரீட்சை விடயதானத்திற்கு சமூகமளிக்காத பரீட்சார்த்திகளில் பெறுபேறுகளில் சமூகமளிக்காதவர் என சுட்டிக்காட்டப்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...