வெசாக் தின தன்சல்களில் கூடுதல் பரிசோதனைகள்

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் உண்பதற்குத் தகுதியற்றதாக இருப்பின், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அப்படி இருந்தும் சில தன்சல்கள் உரிய தரத்தில் பராமரிக்கப்படுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் கூடுதலான தன்சல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தன்சல்கள் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தன்சல்களை நடத்த விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறும் சங்கம் தெரிவிக்கிறது.

பதிவு செய்யும் போது, ​​பொது சுகாதார பரிசோதகர்கள், தன்சல்களை வழங்குவதில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...