அருள் மழையில் நனையும் ஹாஜிகள்:மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற ஒர் அருமையான காட்சி

Date:

துல் ஹஜ் 11ஆவது நாளான இன்று மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் அங்கு மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

அல்லாஹ்வின் அருள் கடும் உஷ்ணத்ததோடு ஹஜ் செய்கின்ற மக்களுக்கு இறங்கிய ஒரு உணர்வை இந்த மழை ஏற்படுத்தியிருக்கிறது.

கஅபாவைச் சூழ தவாப் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற அந்த அருமையான காட்சி இந்த வீடியோவில் காண்பிக்கப்படுகின்றது.

மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது இருக்கின்ற கடும் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் இது வரைக்கும் 20 பேர் வரை மரணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மக்காவில் மழை பெய்திருக்கின்ற செய்தி அங்கிருக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகிருக்கின்றது.

கஅபாவை சூழ தவாப் செய்கின்ற மக்கள் மழையில் நனைந்தவாறு தங்களுடைய கடமையான தவாப் செய்கின்ற காட்சியானது அவர்கள் எவ்வளவு தூரம் அந்த உஷ்ணத்தை தாங்கிக்கொண்டு மழை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...