அருள் மழையில் நனையும் ஹாஜிகள்:மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற ஒர் அருமையான காட்சி

Date:

துல் ஹஜ் 11ஆவது நாளான இன்று மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் அங்கு மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

அல்லாஹ்வின் அருள் கடும் உஷ்ணத்ததோடு ஹஜ் செய்கின்ற மக்களுக்கு இறங்கிய ஒரு உணர்வை இந்த மழை ஏற்படுத்தியிருக்கிறது.

கஅபாவைச் சூழ தவாப் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற அந்த அருமையான காட்சி இந்த வீடியோவில் காண்பிக்கப்படுகின்றது.

மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது இருக்கின்ற கடும் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் இது வரைக்கும் 20 பேர் வரை மரணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மக்காவில் மழை பெய்திருக்கின்ற செய்தி அங்கிருக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகிருக்கின்றது.

கஅபாவை சூழ தவாப் செய்கின்ற மக்கள் மழையில் நனைந்தவாறு தங்களுடைய கடமையான தவாப் செய்கின்ற காட்சியானது அவர்கள் எவ்வளவு தூரம் அந்த உஷ்ணத்தை தாங்கிக்கொண்டு மழை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...