கடும் மழையால் கண்டி மாவட்டத்தில் 3200 பேர் பாதிப்பு!

Date:

மத்திய மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில்  700 குடும்பங்களைச் சேர்ந்த 3200 பேர்  வரை பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மத்திய மலையகத்தில் கடும் மழை பெய்து வருவதால் கண்டி மாவட்டத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக  மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்  650 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளில் ஆபத்தான  நிலையில் 4000  மரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை  அகற்றுவதற்கு பிரதேச செயலகங்களுடன்  இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்’

கண்டி மாவட்டத்தில் கங்க இஹலபோரலய, கங்க வட்டகோரலய, உடுநுவரை, யட்டிநுவரை, உடதும்பறை, பாத்த்தும்பறை போன்ற பிரதேச செயலக பிரிவுகள் கூடுதலான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...