கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

Date:

2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு (National Colleges of Education) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

அதன்படி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பெறுபேற்றின் (G.C.E A/L) அடிப்படையில் பயிலுநர்களின் இரு தொகுதியினர் ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

மேற்படி ஆட்சேர்ப்புக்குரியதான பாடநெறிகளுக்கான தகைமைகளைப் பரிசோதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதானது தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிபெறுவதற்கான தகைமையல்ல என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...