காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்: கடந்த 24 மணித்தியாலங்களில் 47 பாலஸ்தீனியர்கள் பலி

Date:

காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 47 பலஸ்தீனியர்கள்  கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவின் பல நகரங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் காசாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை 37,765 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 86,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், போரினால் காணாமல் போன சிறுவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களை பிரிந்து தவித்து வருவதால் அவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் அலெஸ்சான்ரா சையே வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...