தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

Date:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில்  தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, பா.ஜ., சார்பில் களமிறங்கிய கோவையில் – அண்ணாமலை, நீலகிரியில் – எல்.முருகன், தென் சென்னையில் – தமிழிசை சௌந்திரராஜன், நெல்லையில் – நயினார் நாகேந்திரன், இராமநாதபுரத்தில் சுயேச்சையாகக் களமிறங்கிய – பன்னீர்செல்வம், தேனியில் அ.ம.மு.கவின் – டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இதேவேளை பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்துடன் பரப்புரையை தொடங்கினோம் , தற்போது ஆட்சியமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான மக்களின் இந்த தீர்ப்பே எங்கள் கூட்டணியின் வெற்றி, ஜனநாயகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...