தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

Date:

நாம் மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்  தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழாவினை இன்று (28) நடாத்துகின்றது.

இது தொடர்பில் கட்சி தலைவர் விஜய் மேலும் தெரிவிக்கையில்,  உங்களுக்கு பிடித்த துறை தேர்வு செய்துகொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கலந்து பேசி நல்ல துறையை தேர்வு செய்யுங்கள்.

நாம் ஒரு துறையை தேர்வு செய்யும்போது அதில் எவ்வளவு தேவை இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், மருத்துவர்களும், பொறியாளர்களும், வழக்குரைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான்.

தலைவர் என்பது அரசியல் ரீதியாக மட்டுமல்ல. எந்தத் துறையில் சிறந்து விளங்கினாலும் அந்தந்த துறைகளில் தலைமைப் பதவிக்கு வர முடியும்.

எதிர்காலத்தில் அரசிலும் கூட ஒரு வேலைவாய்ப்பு வழிகாட்டியாக இருக்கலாம். நன்கு படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல தலவர்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சமூக வலைதளத்தில் ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களை மாணவர்கள் நம்பக் கூடாது. அது சில நேரங்களில் புரளியாக கூட இருக்கலாம்” என்றார்.

இதன்போது, மாணவர்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம் என்றும் தற்காலிக மகிழ்ச்சிக்கு போதை பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், ‘say no to drugs’ என போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களை உறுதிமொழியையும் ஏற்க வைத்துள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...