தரம் ஒன்றிற்கு மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றறிக்கை நாளை!

Date:

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் நாளை ஜூன் 24ஆம் திகதி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு ஜூன் 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு எந்தவித அநீதியும் ஏற்படாத வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்று புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின் பிரிவு 2.1, சில ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் மூலம், பிறப்புச் சான்றிதழ் இல்லாத மற்றும் ஐந்து வயதுக்கு குறைவான மற்றும் வயதுச் சான்றிதழை வழங்கும் குழந்தைகள் நியாயமற்ற அல்லது பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது என்று கூறுகிறது.

புதிய சுற்றறிக்கையின்படி, விண்ணப்பதாரர்கள் முறைகேடுகள் செய்ய முடியாது. மேலும் பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு முன்னைய சுற்றறிக்கைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...