தரம் 1 இற்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் திருத்தம்!

Date:

முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின்படி, சமத்துவமான கல்வியை உறுதிசெய்யும் வகையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், முறைகேடுகளைக் குறைக்கும் வகையிலும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் முறை நடைபெறும் என்று அரசாங்கம் கூறுகிறது.

இதன்படி, கடந்த வருடங்களில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்து 2025 ஆம் ஆண்டு மற்றும் அடுத்த வருடங்களில் திருத்தப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...