திருகோணமலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட அமைச்சர் சுசில் இணக்கம்!

Date:

கிழக்கு மாகாணம் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டது தொடர்பிலும், அந்த மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ள விடயத்தையும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றில் எடுத்துரைத்து அந்த மாணவிகளின் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சரை கேட்டுக்கொண்டார்.

நேற்றைய (05) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந்த விடயத்தில் பேசிக்கொண்டிருந்த போது இதற்கு பதிலளிக்கும் விதமாக  கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது  இது சம்பந்தமான விசாரணைகள் எல்லாம் முடிவடைந்து விட்டது. பெறுபேற்றை உடனடியாக வெளியிடுமாறு நான் பரீட்சை திணைக்கள ஆணையாளரிடம் கூறியிருக்கிறேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்திருந்தார்.

விரைவில் இந்த பெறுபேறுகளை வெளியிடுமாறு அதிகாரிகளை பணித்துள்ளேன். உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இடம் உறுதிபட தெரிவித்தார்.

குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவிகளின் பெறுபேறுகளை இந்த வாரத்தினுள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பெறுபேற்றை இந்த வாரமே வெளியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுசில் உறுதியளித்துள்ளதுடன் இந்த விடயத்தில் பெரிய தவறு நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வருகிறது.

இது முஸ்லிங்களின் கலாசார பர்தா ஆடை அணிந்து வந்தமையால் ஏற்பட்ட விடயம். இந்த பிரச்சனைக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...