துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது.

Date:

துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (07) நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளது.

அதற்கமைய, இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1445 துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான (பிறை 10) எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (07) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிறைக்குழு ஆகியன இணைந்து இவ்வறிவிப்பை ஏகமனதாக வெளியிட்டுள்ளது.

இதேவேளை  துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி சவூதியில் தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...