மத்திய வங்கிக்கு துணை ஆளுநராக தாசிம் நியமனம்

Date:

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம்  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏ.ஏ.எம். தாசிம் மற்றும் ஜே.பி.ஆர். கருணாரத்ன ஆகியோர் துணை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய துணை ஆளுநர்கள் முறையே ஜூன் 20 மற்றும் ஜூன் 24 முதல் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கை மத்திய வங்கி ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டபடி, நிதி அமைச்சரினால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏ. ஏ.எம்.தாசிம் இலங்கை மத்திய வங்கியில் (CBSL) 31 வருடங்களுக்கும் மேலாக வங்கி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலில் சேவையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...