லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Date:

லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு ஒரு கிலோ 350 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவால் குறைப்பட்டு 190 ரூபாவுக்கும் வெள்ளை கௌப்பி 110 ரூபாவால் குறைப்பட்டு 990 ரூபாவுக்கும் சிவப்பு கௌப்பி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 950 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 780 ரூபாவுக்கும், நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 930 ரூபாவுக்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த அத்தியாவசியப் பொருட்களின் குறைக்கப்பட்ட விலையை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (06) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...