வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்: பொலிஸ் மா அதிபர்

Date:

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதாள உலகக் குழுவினரை ஒடுக்குவதற்கு அவர்களிடமுள்ள துப்பாக்கிகள் பாரிய தடையாக உள்ளமையினால் முப்படையினரின் ஆதரவுடன், அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை கைப்பற்றுமாறும்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் யுக்திய நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் யுக்திய நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...