அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!

Date:

ஆசிய சமூக சேவைத்துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO), தரவரிசையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு கரும்புள்ளி அடைந்திருந்த இலங்கை, 2024 ஆம் ஆண்டில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது.

2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயற்றிறனை அளவிடும் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல் சுட்டிக்கமைய, இவ்வாண்டுக்கான பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

இதற்கமைய கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் DOING OKEY குழுவில் இலங்கை இணைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் சுட்டெண் படி, இலங்கை பங்களாதேசுடன் தரவரிசையில் NOT DOING ENOUGH பிரிவில் இருந்தமை சுட்டடிக்காட்டத்தக்கது.

இலங்கையின் இந்த முன்னேற்றம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக அமைந்துள்ளதாக, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவிடப்படும் இந்தக் குறியீட்டில், சிங்கப்பூர், சீனா, தைபே ஆகிய நாடுகளின் வகுதியான DOING WELL குழுவில் 2026 ஆண்டில் இணைவதற்கான மறுசீரமைப்புகள் இடம்பெறுவதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...