இலங்கைத் திருநாட்டில் சமய,சமூக,தேச நலன் சார்ந்த பணிகளில் உழைத்து வருகின்ற இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் வருடாந்த அங்கத்தவர் மாநாடும் 70வருட பூர்த்தி விழாவும் இன்று 29ம் திகதி சனிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறுகிறது,
ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் அஷ்,M.H.M.உஸைர் இஸ்லாஹியின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், வல்பொல ராகுல நிலையத்தின் பணிப்பாளர்.
மரியாதைக்குரிய
கல்கந்தே தம்மானந்த தேரர்,
ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர். அஷ்.அர்கம் நூர் ஆமித்,
ஜனாதிபதி. சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,
சர்வோதய தலைவர் Dr. வின்யா ஆரியரத்ன, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் Dr.ஜஹான் பெரேரா, பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்.பேராசிரியர். சுமதி சிவமோகன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந் நிகழ்வில் உரையாற்றுவதோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுதல், மலர் வெளியீடு உட்பட இன்னும் பல நிகழ்சிகள் இடம்பெற உள்ளன.