கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன்: சந’தேகநபர் வெளிஓயாவில் கைது

Date:

சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே சந்தேக நபர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது தாக்குதலுக்குள்ளான சிறுவனும் இவர்களுடன் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, சிறுவனின் தந்தை என கருதப்படும் 45 வயதுடைய ஆண் ஒருவரும், 46 மற்றும் 37 வயதுடைய பெண்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வெலிஓயா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...