சர்வமத தலைவர்களின் புதிய நியமனத்துக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!

Date:

அண்மையில் நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட சர்வமத தலைவர்களான கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் குரே பாதர் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது இனங்களுக்கிடையில் சகவாழ்வு இன,மத நல்லிணக்கத்தை மேற்கொள்ளவதில் 20வருடங்களுக்கும் மேலாக அக்கறையுடனும், முன்மாதிரியுடனும் செயலாற்றி வரும் சர்வமத தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வமத தலைவர்களுக்கு புதிதாக கிடைத்த இப்பதவியினூடாக இலங்கையில் வாழக்கூடிய மூவின சமூக மக்களுக்கிடையில் இன, மத நல்லிணக்கம், சகவாழ்வை பலப்படுத்த சிறந்ததொரு சந்தர்ப்பமாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இன, மத நல்லிணக்கத்திற்கான எதிர்கால வேலைத்திட்டங்களை சிறப்புடன் முன்னெடுத்துச் செல்ல சர்வமத தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மனமகிழ்வுடன் தனது வாழ்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...