சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது சிறுவன் மொஹமட் ஷம்லான்

Date:

பீபில்ஸ் ஹெல்பிங் பவுண்டேஷனுடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை நிகழ்வில், மூன்று வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

1098  உருவப்படங்களை அடையாளம் காட்டி, அவற்றின் பெயர்களையும் இச்சிறுவன் கூறியதால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தின் ஹுனுப்பிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகனான மூன்று வயது மொஹமட் ஷம்லான் என்ற சிறுவனே  இப்புகழை ஈட்டியுள்ளார்.

எண்கள், பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி  வகைகள், மனித உடலின் உள் உறுப்புகள், ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள்,  சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு  தொழில்கள், உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்,  தேசிய வீரர்கள், உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098  உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக்  கூறி,  இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதனால்,உலகின் அதிக  ஞாபகத் திறமையுள்ள சிறுவன் என்ற பெயர் இவருக்கு கிடைத்துள்ளது.

இச்சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக்  கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை  இச்சிறுவனுக்கு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...