தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

Date:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில்  தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, பா.ஜ., சார்பில் களமிறங்கிய கோவையில் – அண்ணாமலை, நீலகிரியில் – எல்.முருகன், தென் சென்னையில் – தமிழிசை சௌந்திரராஜன், நெல்லையில் – நயினார் நாகேந்திரன், இராமநாதபுரத்தில் சுயேச்சையாகக் களமிறங்கிய – பன்னீர்செல்வம், தேனியில் அ.ம.மு.கவின் – டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இதேவேளை பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்துடன் பரப்புரையை தொடங்கினோம் , தற்போது ஆட்சியமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான மக்களின் இந்த தீர்ப்பே எங்கள் கூட்டணியின் வெற்றி, ஜனநாயகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...