புனித மக்காவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நைஜீரிய யாத்ரீகர்!

Date:

ஹஜ் கடமைகளுக்காக புனித மக்கா சென்ற நைஜீரிய யாத்திரிகர் ஒருவர் ஹஜ் பருவத்தின் முதலாவது குழந்தையை மக்காவில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பெற்றெடுத்துள்ளார்.

மொஹமட் என்று பெயரிடப்பட்ட இந்தக்குழந்தை மற்றும் தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணியாக இருந்த பெண் கடந்த புதன்கிழமை மக்கா ஹெல்த் கிளஸ்டரின் கீழ் உள்ள ஹரம் அவசர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர மருத்துவர்கள் உடனடியாக கவனித்து மகப்பேறு வார்டுக்கு மாற்றினர்.  அங்கு அவருக்கு இயற்கையான முறையில் பிரசவம் நடந்தது. இருப்பினும் புதிதாகப் பிறந்த குழந்தை, குறைமாதமாக இருப்பதால், சிறப்பு கவனிப்பு அளிக்கப்படுகிறது.

மக்கா மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஹஜ்ஜின் போது யாத்ரீகர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க முழு திறனுடன் செயல்படுவதுடன் அவசர சிகிச்சை  பிரசவ ஆதரவு மற்றும் விரிவான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பருவத்தில் ஏராளமான குழந்தைகளை பிரசவிக்கின்றன.

நைஜீரிய யாத்ரீகர் பிரசவத்தின் போது மருத்துவ ஊழியர்களின் சிறப்பான கவனிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...